Connect with us

உள்நாட்டு செய்தி

பிரதமரின் அதிரடி உத்தரவு

Published

on

அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ள பகுதிகளில் வாழும் 12 ஆயிரம் குடும்பங்களை விரைவாக பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்க்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரனங்களை விரைவாக பெற்றுக்கொடுக்கப்படுவது குறித்து நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தங்களினால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை பெற்றுகொடுப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இதன்போது ஆராய்ந்துள்ளார்.