Connect with us

உள்நாட்டு செய்தி

அட்டன் – கண்டி பிரதான வீதியில் விபத்து ஒருவர் மரணம் இருவர் வைத்தியசாலையில்

Published

on

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் கண்டி பிரதான வீதியில் பகதுலுவ பகுதியில் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான திருத்தவேலையில் ஈடுபடும் பஸ் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (11) காலை சுமார் 6.00 மணிக்கும் 7 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டி பகுதியிலிருந்து கினிகத்தேனை பகுதியியை நோக்கி வருகை தந்து கொண்டிருந்த பாரவூர்தியும் நாவலப்பிட்டி பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான திருத்து வேலையில் ஈடுபடும் பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காயமடைந்த இருவரும் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.