Connect with us

உள்நாட்டு செய்தி

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த  ஜீப் ரக வண்டி:சாரதி பலி 

Published

on

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் ஜீப் ரக வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் சாரதி வாகன சில்லின் அடியில் நசுங்கி  உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா கெல்சி தோட்டத்தைச் சேர்ந்த டொமினிக் அனுஷன் (வயது 21) ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம்  காணப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு சவப்பெட்டியை ஏற்றிச் சென்று ஒப்படைத்த  பின்னர், சாரதி தனது வீட்டுக்கு திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (16) இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில்,  இன்று (17.11.2022) அதிகாலையிலேயே அவ்வழியாக சென்ற தொழிலாளர்கள்  விபத்தை கண்டு நானுஓயா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொ