Connect with us

உள்நாட்டு செய்தி

வவுனியா பேருந்து விபத்து: மூவர் உயிரிழப்பு

Published

on

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 பேர் தீவில சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (வயது 23),

சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32), தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் விபத்துக்குளான அதி சொகுசு பேருந்தை மீட்கும் பணியில் இன்று (05.11.2022) காலை இராணுவத்தினர் ஈடுபட்டிருந்ததுடன் இதன் காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து 2 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.