Connect with us

உள்நாட்டு செய்தி

பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Published

on

அதிக வேகத்துடன் பயணித்த இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இரண்டு தனியார் பஸ்களும் நாவலப்பிட்டி- மிபிட்டிய பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களுள் பஸ்ஸின் சாரதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த வீதியில் அடிக்கடி விபத்து இடம்பெறும் பகுதியிலேயே இந்த விபத்தும் இடம்பெற்றுள்ளதாகவும் அதிக வேகமே விபத்துக்கான காரணம் என்றும்  ​தெரிவித்துள்ளனர்.