Connect with us

உள்நாட்டு செய்தி

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீக்க முடிவு

Published

on

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார், சுற்றுலாத் துறையினர் மற்றும் ஏனைய முன்களப் பணியாளர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.