Connect with us

உள்நாட்டு செய்தி

எரிபொருளுக்கு தட்டுப்பாடில்லை: அமைச்சரவை இணைப் பேச்சாளர்

Published

on

ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கை ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டு அதுதொடர்பான இறுதி முடிவு வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

நாட்டில் தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடில்லை.அது குறித்து மக்கள் எந்தவித சந்தேகமும் தேவையற்ற பீதியையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உண்டு என்றும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.