Connect with us

உள்நாட்டு செய்தி

இராதா விடுத்த அழைப்பு

Published

on

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் அல்லது விலகி சென்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான கதவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இவர் தான் வர வேண்டும் அல்லது அவர் தான் வர வேண்டுமென யாரையும் தனிப்பட்டு அழைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

“அனுஷா சந்திரசேகரனுக்கோ அல்லது அரவிந்குமாருக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை அடிமட்ட தொண்டன் வரையில் அனைவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியை மேலும் வலுபடுத்தும் முறையிலேயே இத்தீர்மானத்தை எடுத்துள்ளோம்” என்றார்.