Connect with us

உள்நாட்டு செய்தி

கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்த EU உறுப்பினர்கள்

Published

on

ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக்குழுவினருக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் சமகால அரசியல் தொடர்பாகவும் பேசப்பட்டது.

இதன்போது அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியபிரதநிதிகள் ராவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.