Connect with us

உள்நாட்டு செய்தி

வத்தளை, மாபோல, ஹூனுபிடிய உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை 12 மணித்தியால நீர் வெட்டு

Published

on

வத்தளை, மாபோல, ஹூனுபிடிய உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை (18) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் விநியோக அமைப்பின் மேம்படுத்தல் பணிகள் காரணமாக நாளை முற்பகல் 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வத்தளை, ஹெந்தலை, எலகந்த, அல்விஸ் நகர், வெலிகடமுல்ல, கெரவலபிடிய, மாபோல, ஹுனுபிடிய, வெடிகந்த, வேவெல்துவ, பிரசங்கவத்த, கிரிபத்கொட புதிய வீதி, பாதிலிய முனை வீதி, தலுபிடிய வீதி மற்றும் அக்பார் வீதி ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.