Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பு 05 மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளில் 10 மணித்தியால நீர்விநியோகத்தடை

Published

on

கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் 10 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை இரவு 11 மணிமுதல் 21 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிவரை நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 05 மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளில் 10 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை கொழும்பு 04 ல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள்து.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத்தடை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது,