Connect with us

உள்நாட்டு செய்தி

கொட்டக்கலை நகர கடைகளை மூட வர்த்தக சங்கம் தீர்மானம்

Published

on

கொட்டக்கலை பகுதியில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக கொட்டக்கலை நகர வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு கொட்டக்கலை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

கொட்டக்கலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி முதல் ஒருவாரத்துக்கு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.