Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பு – 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு

Published

on

கொழும்பு மா நகர சபை எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில், இன்று (20) நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்தியவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக இவ்வாறு நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு – 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில், இன்று (20) இரவு 11 மணி முதல், நாளை (21) காலை 9 மணி வரை 10 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு – 04 பகுதிக்கு, குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.