Connect with us

Uncategorized

அரச சேவையை வழமைபோன்று முன்னெடுத்து செல்ல அரச சேவையை வழமைபோன்று முன்னெடுத்து செல்வதற்காக திருத்தப்பட்ட புதிய சுற்றுநிரூபம்

Published

on

அரச சேவையை வழமைபோன்று முன்னெடுத்து செல்வதற்காக திருத்தப்பட்ட புதிய சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.

புதிய சுற்றுநிரூபத்திற்கு அமைய, அரச நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வாரத்தில் மூன்று நாட்களேனும் பணிக்கு சமூகமளிக்க வேண்டும்.

குழு முறைமைக்கமைய பணியாற்ற வேண்டிய நாளில், ஊழியர் ஒருவர் பணிக்கு சமூகமளிக்காவிட்டால், அது அவரின் தனிப்பட்ட விடுமுறை நாளாகக் கருதப்படும்.

இதனைத் தவிர, கர்ப்பிணிகள், ஒரு வயதிற்கும் குறைந்த குழந்தைகள் உள்ள தாய்மாரை பணிக்கு அழைக்க வேண்டாம் என சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் உரிய சுகாதார பாதுகாப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுற்றுநிரூபத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.