Connect with us

உள்நாட்டு செய்தி

இசாலினியின் மரணம் : குற்றவாளிகள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவார்கள்

Published

on

இசாலினியின் மரணம் தொர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 16 வயது டயகம சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் மனைவி, அவரது மாமனார், சிறுமியை பணிக்கு அழைத்துவந்த தரகர் ஆகியோர் இன்று புதக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மற்றுமொரு பாலியல் குற்றச்சாட்டில் கைதான ரிசாட் பதியுதீனின் மைத்துனரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.