Connect with us

உள்நாட்டு செய்தி

கல்வி அமைச்சின் செயலாளரின் முக்கிய அறிவிப்பு

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்கள் தொடர்பில் தொடர்ந்தும் பரிசீலிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் நடைபெறும் தினம் தீர்மானிக்கப்பட்டவுடன் அது குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை ஓக்டோபர் 3 ஆம் திகதியும், உயர்தர பரீட்சை ஒக்டோபர் 4 ஆம் திகதியும் நடைபெறும் என கடந்த 9 ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்திருந்தார்.

எனினும் உயர்தர பரீட்சையை நடத்தும் தினம் தொடர்பில் இரு வேறு கருத்துக்கள் உள்ளதாக கல்வியமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.