Connect with us

உள்நாட்டு செய்தி

7 மாவட்டங்களில் அமுலில் உள்ள மண்சரிவு எச்சரிக்கை

Published

on

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கொழும்பு ,காலி ,களுத்துறை ,கேகாலை , மாத்தறை ,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய மற்றும் நெலுவ போன்ற பிரதேசங்கள் இதில் அடங்குகின்றன.

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிற்ற, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்த, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, எலபாத்த, எஹெலியகொட ,கஹவத்த, குருவிற்ற, நிவித்திகல, கலவான போன்ற பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் கொழும்பு, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.