Connect with us

உள்நாட்டு செய்தி

உடப்பு, பாரிபாடு கடற்கரையோரத்தில் வயோதிப பெண் ஒருவரின் சடலம்

Published

on

புத்தளம் – உடப்பு, பாரிபாடு கடற்கரையோரத்தில் வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று (01) காலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க குறித்த வயோதிப பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது.

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த வயோதிப பெண் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிப பெண் மீனவத் தொழில் நிமித்தம் நேற்று முன்தினம் 29 ஆம் திகதி மாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார் என அவரது குடும்ப உறவினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கரை ஒதுங்கிய குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.