Connect with us

உள்நாட்டு செய்தி

உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம்

Published

on

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (22) காலை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

10 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் கடந்த தினம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐ.ம.சக்தியால் இன்று (22) எரிப்பொருள் விலையேற்றத்திற்கு எதிராக வாகன எதிர்ப்பு பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.