Connect with us

உள்நாட்டு செய்தி

கம்பன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை:இதுவரை 30 பேர் கையொப்பம்

Published

on

அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அதேபோல் இதுவரை 30 உறுப்பினர்கள் கம்பன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை என்ற பெயரில் நம்பிக்கை பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி முயற்சிப்பதாகவும் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கம்பன்பில கூறியுள்ளார்.