Connect with us

Sports

விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக நடால் அறிவிப்பு

Published

on

விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

‘‘பிரெஞ்ச் ஓபன்- விம்பிள்டன் ஓபன் தொடருக்கு இடையில் இரண்டு வார இடைவெளி மட்டுமே உள்ளது.

செம்மண் தரையில் விளையாடிய பின்னர், உடனடியாக தனது உடலை புல்தரைக்கு ஏற்றவாறு மாற்றுவது எளிதானது அல்ல’’ என நடால் தெரிவித்துள்ளார்.

விம்பிள்டன் ஓபன் டெனிஸ் தொடர் எதிர்வரும் 28 ஆம்; திகதி முதல் ஜூலை 1 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.

ஜூலை 23 ஆம் திகதி டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஆரம்பமாகி ஒகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.