Connect with us

உள்நாட்டு செய்தி

கிளிநொச்சியில் விபத்தில் சிறுத்தை பலி

Published

on

கிளிநொச்சியில் வீதியை கடக்க முற்பட்ட சிறுத்தை விபத்தில் பலியாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் தொண்டமான் நகர் பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான சிறுத்தையின் உடல் காணப்படும் பகுதியை அண்மித்து இரத்தம் காணப்படுவதுடன், சிறுத்தையின் தலைப்பகுதியில் காயங்களும் காணப்படுகின்றது.