Connect with us

உள்நாட்டு செய்தி

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு

Published

on

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 21 தினங்களில் 650 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பிரதானியான டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு பரவும் எச்சரிக்கை நிலவுகின்றது.

ஆகையினால் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.