Connect with us

உள்நாட்டு செய்தி

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Published

on

கொழும்பு, கம்பஹா களுத்துறை, காலி கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் நிமல்கா பன்னில ஹெட்டி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த வைத்தியர் நிமல்கா பன்னில ஹெட்டி, குறித்த பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த மாதம் 11 ஆயிரத்து 500 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டிருந்ததுடன் ,ஓகஸ்ட் மாதத்தில் 5 ஆயிரத்து 600 ஆக குறைவடைந்துள்ளது. இருப்பினும் எதிர்வரும் காலங்களில் பருவமழையினால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் டொக்டர் நிமல்கா பன்னில ஹெட்டி தெரிவித்தார்.