Connect with us

உள்நாட்டு செய்தி

பயணக் கட்டுப்பாடு நீடிப்பு

Published

on

அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாட்டை அடுத்த மாதம் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் ஊடகச் சந்திப்பில் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார்.

அதேபோல் எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆகிய தினங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தற்காலிகமாக நடமாட்ட கட்டுப்பாடு தளர்த்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நடமாட்டக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் போது ஒரு வீட்டில் ஒருவர் மாத்திரம் அருகில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு சென்று பொருட் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.