Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் தொற்று மக்களோடு சேர்ந்து செழிப்பாக வளர்ந்து வருவதாக ஐ.நா தெரிவிப்பு

Published

on


இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் கொரோனா பரவலின் வேகம் மூச்சுத் திணற வைப்பதாக உள்ளது என ஐ.நா. பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த நோய்த்தொற்று மக்களோடு சேர்ந்து செழிப்பாக வளர்ந்து வருவது கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஆணையமும், இத்தாலி சார்பில் ரோம் நகரில் மே 21 ஆம் திகதி ஆரம்பமான ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நோய்த்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.