Connect with us

உள்நாட்டு செய்தி

இதுவரை 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்

Published

on

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிப்பு என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்தில் இதுவரை 60 பேர் டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்ததுடன், அவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் மற்றும் 50-க்கும் குறைந்த வயதுடையவர்களென அவர் கூறியுள்ளார்.