Connect with us

உள்நாட்டு செய்தி

ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கைது

Published

on

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று (24) அதிகாலை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.