Connect with us

உள்நாட்டு செய்தி

நேற்று 141 தொற்றாளர்கள்

Published

on

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 141 கொவிட் தொற்றாளர்களில் பெரும்பான்மையானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என Covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று கம்பஹா மாவட்டத்திலிருந்து 25 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 12 பேரும், குருநாகல் மாவட்டத்திலிருந்து 25 பேரும், முல்லைத்தீவு மற்றும் காலி மாவட்டங்களிலிருந்து தலா 2 பேர் வீதமும் நேற்றைய தினம் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், பதுளை மாவட்டத்திலிருந்து 4 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 6 பேரும், மொனராகலை மற்றும் கேகாலை மாவட்டங்களிலிருந்து தலா 3 பேர் வீதமும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர்.

மேலும், மட்டக்களப்பு, வவுனியா, அம்பாந்தோட்டை, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கண்டி மாவட்டங்களிலிருந்து தலா இருவர் வீதமும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 19 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர் என Covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.