Connect with us

உள்நாட்டு செய்தி

1000 ரூபாவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

Published

on

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக வழங்குமாறு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைகால தடை விதிக்குமாறு கோரி, பெருந்தோட்ட நிறுவனங்களினால் மனு ஊடாக தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்கு எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளை குறித்தொதுக்கி வழக்கினை நீதிமன்றம் பிற்போட்டது.