Connect with us

Sports

இலங்கை,மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டெஸ்டையும் சமம் செய்தது

Published

on

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்hவது டெஸ்ட் போட்டியும் வெற்றித் தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

கடந்த 29 ஆம் திகதி மேற்கிந்தியதீவுகளின் நொத் சவுண்ட் மைதானத்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்டில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட்டது.

அதற்கமைய முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 354 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இலங்கை தமது முதல் இனிங்சில் 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து தமது இரண்டாவது இனிங்சை தொடர்ந்த மே.தீவுகள் 280 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதனால் இலங்கையின் வெற்றி இலக்கு 377 என நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போட்டி சமநிலையடைவதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின் கிரேக் பிரத்வைட்டும் தொடர் நாயகனாக சுரங்க லக்மாலும் தெரிவாகினர்.