Connect with us

உள்நாட்டு செய்தி

போதைப்பொருள் குறித்து தகவல் வழங்குவோருக்கு சன்மானம்

Published

on


போதைப்பொருள் குறித்து தகவல்களை வழங்குவோருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.


போதைப்பொருள் பாவனையை நாடு முழுவதிலும் ஒழிக்கும் நோக்கில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் போதைப்பொருள் குறித்து தகவல் அறிந்தால் 119 ,118 ,1997 ஆகிய தொலைபேசி எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.