Connect with us

உள்நாட்டு செய்தி

சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல தயாரான இலங்கையர்கள் சிலர் கைது

Published

on

படகு மூலம் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்ட 24 இலங்கையர்களை புத்தளம் ,கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


திருகோணமலை மட்டக்களப்பு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதுடன் இவர்களில் ஒரு பெண்ணும் மூன்று சிறுவர்களும் 20 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்பிட்டிய நோக்கி சென்ற லொறி ஒன்றை சோதனையிட்ட போதே கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கனடாவுக்கு அனுப்பி வைப்பதற்கு ஒருவரிடமிருந்து மூன்று இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை பணத்தை குறித்த ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ள சந்தேகநபர் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர்களை இன்றைய தினம் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.