Connect with us

உள்நாட்டு செய்தி

உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார் சுனில் ஹந்துன்னெத்தி.

Published

on

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சீனி இறக்குமதியின் போது 15.9 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சுனில் ஹந்துன்னெத்தியினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட சீனி மீதான வரியை குறைத்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனி இறக்குமதி மீதான வரியை 25 சதங்கள் வரையில் குறைத்ததன் ஊடாக இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறித்த மனுவில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு நெருக்கமான வியாபாரிகளுக்கு சலுகை வழங்கும் விதமாக இவ்வாறு வரி குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *