Connect with us

உள்நாட்டு செய்தி

ஹிருணிகாவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

Published

on

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2015ம் ஆண்டு இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, தடுத்து வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவத்தில் ஹிருணிகா பிரேமசந்திர மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகாத காரணத்தை அடிப்படையாகக் கொண்டே, ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.