Connect with us

உள்நாட்டு செய்தி

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று

Published

on

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.


இன்று முற்பகல் பத்து மணி முதல் மாலை 5.30 வரை அறிக்கை மீதான விவாதம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.


குறித்த அறிக்கை தொடர்பில் 3 நாள் விவாதத்தை மேற்கொள்ள கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தின் போது கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர்.