Connect with us

உள்நாட்டு செய்தி

பெருந்தோட்ட கம்பனிகளுக்கு தொழில் ஆணையாளர் விடுக்கும் உத்தரவு

Published

on

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையில் தீர்மானிக்கப்பட்ட 1000 ரூபா கொடுப்பனவை தோட்ட நிறுவனங்கள் இன்று முதல் வழங்க வேண்டும் என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கான வர்த்தமானியை இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் அரச அச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் 5 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.