Connect with us

உள்நாட்டு செய்தி

“1000” வேண்டும்: ஹட்டனில் செங்கொடி சங்கத்தினர் போராட்டம்

Published

on

ஹட்டனில் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செங்கொடி சங்கத்தினர் ஹட்டன் தொழில் திணைக்களத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கூட்டு ஒப்பந்தத்தை மீள கொண்டு வரவேண்டும், தோட்டப்பகுதிகளில் துண்டாக்கப்பட்டு விற்கப்படும் காணி முறைகள் நீக்கப்பட வேண்டும், தோட்டத்தொழிலாளர்களுக்கான அடக்குமுறைகள் தகர்தெறியப்பட வேண்டுமென வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்ப்பட்டது.

மேலும் இதுவரை கிடைக்கப்பெறாத தோட்டங்களில் ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இப்போராட்டத்தின் போது செங்கொடி சங்க உத்தியோகத்தர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் மூன்று அம்ச கோரிக்கைகள் உள்ளடங்கிய மஹஜர் ஒன்றும் மாவட்ட தொழில் ஆணையாளருக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.