முக்கிய செய்தி
இலங்கையில் பரவிவரும் போதைப்பொருள் பாவனை….!

இலங்கையின் கிராமிய பகுதிகளில் ஈ-சிகரட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கம்பஹா மற்றும் ஜாஎல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போது சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான ஈ சிகரட் வகைகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தெடர்பில் கருத்து வெளியிட்ட மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி, கிராமிய பகுதிகளில் ஈ-சிகரட் பயன்பாடு வியாபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஈசிகரட் பயன்பாடு பாடசாலை மாணவர்கள் மற்றும் 40 வயதுக்கும் குறைந்தவர்கள் மத்தியில் அதிகளவு காணப்படுவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக கொழும்பு, கம்பஹா, பாணந்துறை போன்ற பகுதிகளில் அதிகளவானவர்கள் ஈ-சிகரட் பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் மாணவர் ஒருவர் ஈ-சிகரட் புகைப்பதற்கு வழங்கி கட்டணம் அறவீடு செய்த சம்பவமொன்று பதிவாகியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இணைய விற்பனை தளங்களின் ஊடாக ஈ-சிகரட் வகைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.