Connect with us

உள்நாட்டு செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான மூளைச்சாலி யார்? – பேராயர் கேள்வி

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான மூளைச்சாலி மற்றும் தாக்குதலை நடத்த உதவியவர்களை இதுவரை ஏன் கைது செய்ய முடியவில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

(உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கையை விரிவாக ஆராய்ந்த பின்னரே அது குறித்த முடிவை எடுக்க முடியும். எனினும் தற்போதைய நிலையில் ஆணைக்குழு தாக்குதல் குறித்து முழுமையாக ஆராய்ந்ததா? என சந்தேகமுள்ளது. தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான மூளைச்சாலி மற்றும் தாக்குதலை நடத்த உதவியவர்களை இதுவரை ஏன் கைது செய்ய முடியவில்லை? ஆகவே இது வந்தான் போனால் போல் தயாரிக்கப்பட்ட அறிக்கையோ? என கேட்க வேண்டியுள்ளது. ஆகவே தாக்குதலுக்கு காரணமான பிரதான மூளைச்சாலி மற்றும் தாக்குதலுக்கு பண ரீதியாகவும் ஏனைய வழிகளிலும் உதவியவரர்களை இரண்டு வருடங்களாகியும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சட்டம் உரிய முறையில் இனியாவது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்.) என்றார்.