Connect with us

உள்நாட்டு செய்தி

இரணைத்தீவில் கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கு ஹக்கிம் எதிர்ப்பு

Published

on

இரணைத்தீவில் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் இனபகுப்பாட்டை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிகளின் ஜனாசாக்களை கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே ஹக்கிம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.