Connect with us

முக்கிய செய்தி

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம் !  

Published

on

 

கொழும்பு நகரில் சிறியளவான மழைவீழ்ச்சியின் போதும் வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் மேலதிக ஆணையாளர் நதீகா தமயந்தி தெரிவித்துள்ளார்.

கால்வாய்களை மறித்து பல கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே இதற்கு பிரதான காரணம். இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனுமதியற்ற கட்டடங்களை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோதமான நிர்மாணங்கள் அகற்றப்பட்டதன் பின்னர் அவற்றின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *