Connect with us

முக்கிய செய்தி

சீரற்ற காலநிலை – 03 பாடசாலைகளுக்கு பூட்டு…!

Published

on

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கட்டிடம் இடிந்து விழும் அபாயம் காரணமாக மூடப்பட்ட பிளாக்வுட் பாடசாலை மாணவிகளை ஹல்துமுல்ல தமிழ் உயர்தர பாடசாலைக்கும்,

மலடோல பாடசாலை மாணவிகளை ஹரன்காவ பாடசாலைக்கும், அனுப்பி வைத்து,

கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச பணிப்பாளர் தெரிவித்தார்.