Connect with us

உள்நாட்டு செய்தி

நீதி, நியாயத்தை எதிர்ப்பார்த்து பொறுமையிழந்துள்ளோம், இனியும் நீதி கிடைக்கவில்லையாயின் சர்வதேச நீதிமன்றத்தை நாட தயார் – கர்தினால்

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இன்று பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதியொன்றை தான் ஜனாதிபதியிடம் கோரியிருந்த போதிலும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

வெகு நாட்களாக கத்தோலிக்க மக்கள் தமக்கான நீதி, நியாயத்தை எதிர்ப்பார்த்து பொறுமையுடன் இருந்தாகவும் தற்போது அந்த பொறுமை இல்லாது போயுள்ளதாகவும் பேராயர் மேலும் தெரிவித்தார்.