Connect with us

உள்நாட்டு செய்தி

கிறிஸ்மஸ் விழா நமக்கு நம்பிக்கையை வழங்குகின்றது

Published

on

கொரோனா தொற்று நோயின் தாக்கம்,அதிக மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம்,விலைவாசி உயர்வு, இரசாயனப் பசளைகளின் தட்டுப்பாடு என நமது வாழ்க்கை பெரும் சுமையாக மாறியுள்ள இத்தகையதொரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த கிறிஸ்மஸ் விழா நமக்கு நம்பிக்கையை வழங்குகின்றது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் விழாவையொட்டி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

மீண்டுமொரு கிறிஸ்மஸ் விழாவை நாம் எதிர் நோக்கி இருக்கின்றோம். இன்றைய நமது நாட்டின் வாழ்க்கைச் சூழ்நிலை நம் எல்லோருக்கும் நம்பிக்கை அற்றதாக,கவலையளிப்பதாக இருக்கின்றது.

எத்தகைய சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கை இழக்காமல் வாழவேண்டும் என்பதையே இந்த விழா நமக்குச் சொல்லித் தருகின்றது.