Connect with us

உள்நாட்டு செய்தி

வலுக்கின்றது 1000 ரூபா போராட்டம்

Published

on

தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, பதுளை, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய மலையக பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் விடுக்கப்பட்ட குறித்த போராட்டத்துக்கு இதர தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லாமல், ஊதிய உயர்வுக்கான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

அத்துடன், மலையகத்திலுள்ள பிரதான நகரங்களும் மூடப்பட்டுள்ளன.