Connect with us

உள்நாட்டு செய்தி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கின்றது

Published

on

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான கவனயீர்ப்பு போராட்டம் இன்று (05) மூன்றாவது நாளாகவும் தொடரவுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி பொத்திவிலில் ஆரம்பமாக இந்த போராட்டம் நேற்று முல்லைத்தீவு வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முல்லைத்தீவில் இருந்து இந்த போராட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த போராட்டத்தை யாழ்ப்பாணம் – பொலிகண்டியில் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடுதலை, பெருந்தோட்ட மக்களின் 1,000 ரூபா சம்பளப் பிரச்சனை, ஜனாஸா தகனம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.