Connect with us

முக்கிய செய்தி

O/L பரீட்சையில் ஆள் மோசடி செய்த இளைஞன் கைது !

Published

on

நடைபெற்று வரும் சாதாரண தர பரீட்சையில் தனது சகோதரருக்கு பதிலாக பரீட்சை எழுதிய இளைஞன், தெனியாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தெனியாய – பல்லேகம வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிங்கள பரீட்சை வினாத்தாளை கையளிக்க தயாரான மேற்பார்வையாளர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *