Connect with us

Helth

தகனம் செய்வதை மட்டுமே ஒரே தெரிவாகக் கொள்வது மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறையாக அமையும் – ஐ.நா

Published

on

கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் செயற்பாட்டை முடிவிற்கு கொண்டு வருமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆர்வலர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.

குறிப்பாக முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வது அவர்களது நம்பிக்கைகளுக்கு முரணானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் நான்கு மனித உரிமைகள் ஆர்வலர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை மட்டுமே ஒரே தெரிவாகக் கொள்வது மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறையாக அமையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்களை அடக்கம் செய்வதன் மூலம் தொற்று பரவக்கூடிய வாய்ப்புள்ளதாக எந்த நாடுகளிலும் விஞ்ஞானபூர்வமாக நிரூபனமாகவில்லை என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரிகளான Ahmed Shaheed, Fernand de Varennes, Clément Nyaletsossi Voule மற்றும் Tlaleng Mofokeng ஆகியோரால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களையே பின்பற்றுவதாகவும் அதனை நிராகரித்தால் ஏற்படக்கூடிய மோசமான நிலைக்கு பொறுப்புக் கூற வேண்டியேற்படும் என கூறினார்.