Connect with us

முக்கிய செய்தி

மே தினத்திற்கான சிறப்பு பாதுகாப்பு திட்டம்!!

Published

on

நாளை (01) நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்படி, மேற்படி பிரதேசங்களில் போக்குவரத்து பாதுகாப்பிற்காக அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெறும் மே பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *